தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள கானா விலக்கில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், விருதுநகர், அண்டை மாநிலமான கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இருந்தும் நாள்தோறும் 500 முதல் 1000 பேர் உள், வெளிநோயாளிகளாகச் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சட்ட வழக்குகளில் தொடப்புடைய சுமார் 50 முதல் 80 பேர் வரை சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இங்கு கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புறக்காவல் நிலையம் சொந்தக் கட்டிடம் இல்லாமல் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தின் புதிய கட்டடடத்தைதென்மண்டல காவல்துறை தலைவர் முருகன் இன்று(டிச.12) திறந்து வைத்தார்.