தேனி மாவட்டம் அன்னஞ்சி பள்ளிவாசல் தெருவில் வசித்து வந்த அமீர்சுல்தான் என்ற முதியவர் உடல்நிலை காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக பெரியகுளம் - தேனி நெடுஞ்சாலையிலுள்ள கபூர்ஸ்தலம் அருகே அவரது உறவினர்கள் குழி தோண்டியுள்ளனர்.
இச்சம்பவ இடத்தில் இறந்தவர்களின் உடலை புதைப்பது சம்பந்தமான வழக்கு ஏற்கனவே கோட்டாட்சியர் தலைமையிலான விசாரணையில் உள்ளதால், இதற்கு அருகில் உள்ள இடத்தின் உரிமையாளரான வடபுதுபட்டியைச் சேர்ந்த நாகஜோதியின் கணவர் குமரேசன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இவர் இந்து எழுச்சி முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.
இதனால், இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உண்டானது. இதில், அன்னஞ்சியைச் சேர்ந்த கனவாபீர், பைஜில் ரகுமான், தீன்ராஜா ஆகியோர் தாக்கியதில் குமரேசனுக்கு உடலில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இறந்தவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததால் ஆத்திரமடைந்த இஸ்லாமிய சமூகத்தினர் திடீரென தேனி - பெரியகுளம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.