நீலகிரி மாவட்டத்தில் தற்போது வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யானைகள், கரடி, காட்டெருமை, புலி, சிறுத்தை உள்ளிட்ட அனைத்து விலங்குகளின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்துள்ளன. மேலும் உணவு தேடி வன விலங்குகள் குடியிருப்புப் பகுதியில் வலம்வருகின்றன.
குறிப்பாக, காட்டெருமைகள் அதிகமாகிவிட்டன, எங்குப் பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக காட்டெருமைகள் வலம்வருகின்றன. குறிப்பாக சிம்ஸ் பூங்கா சாலைகளில் வலம்வரும் காட்டெருமைகளால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கின்றனர்.
இது போன்று சுற்றுலாத் தலங்களின் அருகே வரும் காட்டெருமைகளின் பக்கத்தில் சென்று சுற்றுலாப் பயணிகள் பலர் புகைப்படம் எடுக்க முயற்சிக்கின்றனர். இதுபோன்ற சமயங்களில் காட்டெருமைகள் சுற்றுலாப் பயணிகளை தாக்கும்போது அவர்களுக்கு பலத்த காயம் ஏற்படுகிறது. சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
சுற்றுலாத் தலங்களின் அருகே வரும் காட்டெருமைகள் எனவே, சுற்றுலாத் தலங்களிலும் சாலையோரங்களிலும் வன விலங்குகளின் அருகே சென்று புகைப்படம் எடுக்கக் கூடாது என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களில் காட்டெருமை தாக்கப்பட்டு இருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.