நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் ஆண்டு தோறும் மாணவிகளுக்கு விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற விளையாட்டு தினத்தில், மாணவிகள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதில் கராத்தே, நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், தேசிய மாணவர் படை அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.
இந்நிகழ்ச்சியில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், மாணவிகள் ஒருவொருக்கொருவர் மேல் நின்று சாகசம் செய்தனர்.