நீலகிரி: உதகையிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையிலுள்ள கோடப்பமந்து பகுதியில் நேற்று (பிப்.19) நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சிலர் குப்பைகளை முறையாக பிரித்துக் கொட்டமல் மக்கும், மக்காத குப்பைகள் இரண்டையும் ஒன்றாக கொட்டியுள்ளனர்.
அதனைப் பணியிலிருந்த தூய்மைப் பணியாளர் கோவிந்தராஜ் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, மதுபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் மாரி, கோவிந்தராஜை தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த கோவிந்தராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாரி மீது பி1 காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.