நீலகிரி:சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கபட்டு வரும் 11 சிங்கங்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யபட்டது. அதில் நீலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது.
இது வனத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில். தமிழ்நாடு வனத்துறை கட்டுபாட்டில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கும் கரோனா தொற்று பரவி உள்ளாதா என்பதை கண்டறிய வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் உத்தரவிட்டார்.
அதனையடுத்து முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 6 பெண் யானைகள், ஒரு மக்னா யானை, 21 ஆண் யானைகள் என மொத்தம் 28 யானைகளுக்கு கடந்த 8ஆம் தேதி கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளபட்டது.