நீலகிரி மாவட்டத்தில் 37 நாள்களுக்குப் பிறகு கடந்த 15ஆம் தேதி மூன்று பேருக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று இருப்பது உறுதிசெய்யபட்டது. இதில் உதகை அருகே உள்ள கப்பச்சி, குளிச்சோலை கிராமத்தில் தலா ஒருவருக்கும், குன்னூர் அருகே உள்ள தைமலை கிராமத்தில் ஒருவருக்கும் தீநுண்மி தொற்று உறுதிசெய்யபட்டது.
இந்நிலையில் இந்தக் கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேற்று (ஜூன் 17) ஆய்வுமேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்கள் குறித்து பொதுமக்கள் 1077 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.