நீலகிாி மாவட்டம், கோத்தகிாி பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகாித்துள்ளது. தற்போது ஊரடங்கு காரணமாக, உணவு மற்றும் தண்ணீா் தேடி கரடிகள் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. அவ்வப்போது அங்குள்ள மரங்களில் மேலே ஏறி விளையாடி வருகின்றன.
இந்நிலையில் கோத்தகிாி அருகேயுள்ள காிக்கையூா் பகுதியில் உள்ள நாவல்மரத்தில் கரடி ஒன்று மேலே ஏறி விளையாடிக்கொண்டிருந்தது அப்போது கரடி மேலிருந்து கீழே திடீரென தவறி விழுந்தது. இதில் படுகாயமடைந்த கரடி பரிதாபமாக உயிாிழந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனா்.