நீலகிரி மாவட்டம் உதகை எழநெல்லி பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாதன்(40). இவர் அரசு ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கு எழநெல்லி அருகேயுள்ள கடம்பராயன்பட்டி சாலையில் சொந்த தோட்டம் உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி குடும்பம் மற்றும் உறவினர்களுடன் விடுமுறையை தோட்டத்தில் களிக்க இரண்டு நாட்களுக்கு முன்பு தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை தோட்டத்தில் உள்ள குளத்தில் பத்மநாதன், உறவினர்கள் சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக பத்மநாதன் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.