நீலகிரி: கூடலூர் நகராட்சிக்குட்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில் சேற்றில் சிக்கி 3 நாள்களுக்கு முன்பு குட்டி யானை இறந்தது. வனத்துறையினர் அப்பகுதிக்கு செல்ல முயன்றனர். ஆனால் குட்டி யானையின் தாய் வனத்துறையினரை நெருங்கவிடாமல் விரட்டியது.
யானையை மீட்க முயற்சி
குட்டி யானை இறந்த பகுதி தண்ணீர் செல்லக்கூடிய பகுதியாக இருந்ததால் உடலை மீட்கும் முயற்சியில் வனத்துறையினர் மிகவும் போராடினர்.