தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரிப்பகுதியில் உலா வரும் கரடிகள்! அச்சத்தில் மக்கள்

நீலகிரி: குன்னூர்-கோத்தகிரி இடையே உள்ள அளக்கரை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கரடிகள் உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

By

Published : Sep 26, 2019, 9:02 PM IST

bear-in-coonoor-tea-estate

நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனவிலங்குள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. இந்தப் பகுதியில் தற்போது கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவை உணவு தேடி குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தோட்டப்பகுதிகளுக்குள் வருகின்றன .

இந்நிலையில் குன்னூர்-கோத்தகிரி இடையே உள்ள அளக்கரை பகுதி தேயிலை தோட்டத்தில் கரடி ஒன்று தனது இரு குட்டிகளுடன் உலா வருகிறது.

தேயிலைத் தோட்டப்பகுதியில் உலா வரும் கரடிகள்

இதனால் இப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அச்சத்தில் வேலைக்கு செல்லாமல் உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தேன் கூண்டுகளை உடைத்து தேனை ருசித்த கரடி!

ABOUT THE AUTHOR

...view details