தமிழ்நாடு

tamil nadu

சுடுகாட்டு மரத்தில் தொங்கிய ஆண் சடலம்!

By

Published : Nov 21, 2019, 3:52 PM IST

தஞ்சை: பட்டுக்கோட்டை மண்ணை நகர் பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டின் முகப்பிலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்த இளைஞரின் சடலத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

young man body hang in Pattukkottai cemetery tree

பட்டுக்கோட்டை மண்ணை நகர் பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டின் முகப்பில் மிகப்பெரிய மரம் ஒன்று உள்ளது. இன்று காலை இந்த மரத்தில் சுமார் 40 அடிக்கு உயரத்தில் சேலையில் தூக்கில் தொங்கியபடி இளைஞர் ஒருவரின் சடலம் இருந்துள்ளது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து காவலர்களுக்கு தகவல் அளித்தனர்.

இதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் இளைஞரின் சட்டைப்பையில் இருந்த அலைபேசியை எடுத்து யார் அவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூக்கில் தொங்கிய நபர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சுடுகாட்டிலுள்ள மரத்தில் தொங்கிய ஆண் சடலம்

மேலும், யாரும் கொலை செய்து அவரை தூக்கில் தொங்க விட்டுச்சென்றனரா என்ற கோணத்திலும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இலங்கை கைதிகளுக்கு பிணை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details