தஞ்சை பெரிய கோயிலில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழன் சிலை மற்றும் அவரது மனைவி லோகமாதேவி சிலை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சிலைகள் மாயமானதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலைவைத்து அப்போதைய ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான காவல் துறையினர், காணாமல் போன சிலைகளில் இரண்டு சிலைகள் தஞ்சாவூர் அரண்மனை கலைக்கூடத்தில் இருப்பதாகக் கல்வெட்டில் ஆராயப்பட்டு கடந்த 6ஆம் தேதி 20க்கும் மேற்பட்டோர் ஆய்வு செய்தனர்.
62 ஆண்டுகளுக்குப் பின்னர் கிடைத்த 2 உலோக சிலைகள்: நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!
தஞ்சாவூர்: அருங்காட்சியகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு உலோக சிலைகளை கும்பகோணம் நீதிமன்றத்தில் காவல் துறையினர் இன்று ஒப்படைத்தனர்.
statue
இந்த ஆய்வில் தஞ்சை அழகர் என்கிற சிவன் சிலை, திரிபுராந்தகர் ஆகிய இரண்டு சிலைகளையும் மீட்ட காவல் துறையினர், கும்பகோணம் நீதிமன்றத்திற்கு இன்று எடுத்துச் சென்று ஒப்படைத்தனர். இந்த இரண்டு சிலைகளும் 62 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானதாக விசாரணையில் தெரியவந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 37 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு வந்த நடராஜர் சிலை