தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிமன்றத்தில் கைவரிசை காட்டிய திருடன்

தஞ்சாவூர்: திருவையாறு நீதிமன்றத்தில் கிளர்க் பையில் ரூ.400 திருடிய அலுவலக உதவியாளர் கைதுசெய்யப்பட்டார்.

By

Published : Jan 11, 2021, 7:59 AM IST

நீதிமன்றத்தில் திருடிய திருடன்
நீதிமன்றத்தில் திருடிய திருடன்

திருவையாறு நீதிமன்றத்தில் கிளர்க் பையில் ரூ.400 திருடிய அலுவலக உதவியாளர் கைதுசெய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

பாபநாசம் 108 சிவலாய தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன் (40). இவர் திருவையாறு குற்றவியில் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்துவருகிறார். இதே அலுவலகத்தில் ரெக்கார்டு கிளார்க்காக ஞானபுஷ்பம் பணிபுரிந்துவருகிறார்.

சம்பவத்தன்று ஞானபுஷ்பம் கைப்பையில் வைத்திருந்த ரூ.400 ரொக்கப் பணத்தைக் காணவில்லை. இந்நிலையில், இது சம்பந்தமாக அங்குள்ள சிசிடிவி கேமராவில் ஆய்வுசெய்து பார்த்தபோது சாமிநாதன் பணத்தை எடுப்பது பதிவாகி இருந்தது.

இதனையடுத்து ஞானபுஷ்பம் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து சாமிநாதனைக் கைதுசெய்து திருவையாறு காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:ஹரியானா விழா மேடையை சூறையாடிய விவசாயிகள்; ஹெலிகாப்டரை திருப்பிச் சென்ற முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details