தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் மாநில தலைவரும் பாஜக ஆதரவாளருமான இப்ராஹிம் தஞ்சாவூரில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "நீட் தேர்வு குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் பொய் பரப்புரைகளை செய்து வருகின்றன. தற்கொலை செய்த மாணவர்களின் குடும்பத்தை வைத்து மரண வியாபாரம் செய்கின்றன.
நடிகர் சூர்யாவின் பின்புலமாக திமுக உள்ளது - தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் மாநில தலைவர்
தஞ்சாவூர்: மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்யும் நடிகர் சூர்யாவின் பின்புலமாக திமுக உள்ளது என்று தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் மாநில தலைவர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா நீட் தேர்வு பற்றி விமர்சனம் செய்து கருத்து வெளியிட்டுள்ளார். அவர் மாணவர்கள் மத்தியில் தவறான கருத்துக்களை பரப்பி, அவர்களை தூண்டி விட்டுள்ளார். நடிகர் என்பதற்காக எது வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்து பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவருக்கு திமுக பின்புலமாக இருந்து செயல்பட்டு வருகிறது.
நடிகர்கள் தேச பற்று செயலை செய்ய வேண்டுமே தவிர தேசத்திற்கு எதிரான செயலை செய்யக் கூடாது. இதேபோல் அவரது மனைவியும், நடிகையுமான ஜோதிகா கோயிலுக்கு செலவழிக்க வேண்டியதை பள்ளிக்கூடத்துக்கு செலவழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் மத்திய அரசை கொச்சைப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது. அவரது நாடகம் விரைவில் முடிவுக்கு வரும்" என்றார்.