தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையை அடுத்த அதிராம்பட்டினம், அம்பேத்கர் நகர், சையது அஹமது என்பவரது மகன் முகமது ரஹ்மத்துல்லா (32). இவர், 2019ஆம் ஆண்டில் விசிட்டிங் விசாவில் ஆஸ்திரேலியா சென்று, அங்குள்ள உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிப்.28ஆம் தேதி செவ்வாய் அன்று காலை ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ரயில் நிலையத்தில் வேலை பார்த்து வந்த தூய்மைப்பணியாளரை இவர் கத்தியால் குத்தி விட்டதாக தெரிகிறது. தொடர்ந்து சிட்னியில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று அங்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக காவல் துறையினர் சுட்டதில் முகமது ரஹ்மத்துல்லா இறந்துவிட்டதாக தெரிகிறது.