தமிழ்நாடு

tamil nadu

ஆஸ்திரேலியாவில் தமிழர் சுட்டுக்கொலை - காரணம் என்ன?

By

Published : Mar 1, 2023, 4:38 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் ஆஸ்திரேலியா நாட்டில் காவல் துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையை அடுத்த அதிராம்பட்டினம், அம்பேத்கர் நகர், சையது அஹமது என்பவரது மகன் முகமது ரஹ்மத்துல்லா (32). இவர், 2019ஆம் ஆண்டில் விசிட்டிங் விசாவில் ஆஸ்திரேலியா சென்று, அங்குள்ள உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிப்.28ஆம் தேதி செவ்வாய் அன்று காலை ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ரயில் நிலையத்தில் வேலை பார்த்து வந்த தூய்மைப்பணியாளரை இவர் கத்தியால் குத்தி விட்டதாக தெரிகிறது. தொடர்ந்து சிட்னியில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று அங்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக காவல் துறையினர் சுட்டதில் முகமது ரஹ்மத்துல்லா இறந்துவிட்டதாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த, அதிராம்பட்டினத்தில் வசித்து வரும் ரஹ்மத்துல்லாவின் தாயார் ஆமினா அம்மாள் மற்றும் அவரது அக்கா மசூதா மற்றும் மொகமது ஆகியோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:பட்டப்பகலில் சிறுவனை தூக்கிச்சென்ற மிக்சர் கம்பெனி ஓனர்.. கடனை முழுமையாக அடைத்த பிறகும் அராஜகம்..

ABOUT THE AUTHOR

...view details