தமிழ்நாடு

tamil nadu

தஞ்சையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தஞ்சை: பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

By

Published : Oct 23, 2019, 2:05 PM IST

Published : Oct 23, 2019, 2:05 PM IST

tamil nadu farmers association protest, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கோட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பயிர் இன்சூரன்ஸ், பயிர் கடன் தள்ளுபடி, நெல் கொள்முதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

மேலும் பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் பாதிப்புக்கேற்ற வகையில் உரிய இன்சூரன்ஸ் தொகையை உடனடியாக வழங்கக்கோரியும், பயிர் இன்சூரன்ஸ் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைக்காமல் விவசாயிகளிடம் நேரடியாக வழங்கிடவும், 2017 - 2018 விடுபட்ட விவசாயிகளுக்கான இன்சூரன்ஸ் தொகையை இனியும் தாமதம் இன்றி வழங்கிடவும், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு பட்டா, சிட்டா இதர சான்றிதழ்கள் கேட்பதை கைவிடவும் கோரிக்கைகள் வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

tamil nadu farmers association protest, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கி உள்ளதால் விவசாயிகளின் நெல்லை விரைந்து கொள்முதல் செய்து ஈரப்பதத்தைக் காரணம் காட்டாமல் கொள்முதல் செய்திடவும், விவசாயிகள் பெரும் கடன் நெருக்கடியில் உள்ளதால், விவசாயிகள் பெற்ற அனைத்து பயிர் கடன்களை தள்ளுபடி செய்யவும், ஏரி குளங்களில் நீர் நிரப்பவும், வாய்க்காலை சீரமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: சாலையில் "நாற்று நட்டு" தை மாதம் அறுவடையாம்... நூதன முறையில் எதிர்ப்பு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details