தஞ்சாவூர் சேவப்பநவாரி இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்(40). இவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி(38). இவர்களது குழந்தைகள் ஸ்வேதா (12) மற்றும் கோகுல் செழியன்(4).
இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக சுரேஷ் - செந்தமிழ்ச் செல்விக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று (ஜூலை29) இரவு ஏற்பட்ட தகராறு முற்றியதில், மனமுடைந்த செந்தமிழ் செல்வி தனது இரண்டு குழந்தைகளுடன் இன்று அதிகாலைகாலை ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த செந்தமிழ்ச்செல்வியை முதலில் மீட்டனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஸ்வேதா , கோகுலசெழியன் ஆகிய இரண்டு குழந்தைகளை தொடர்ந்து தேடிவருகின்றனர் .
இந்நிலையில், மீட்கப்பட்ட செந்தமிழ்ச் செல்வி, அவரது கணவர் சுரேஷ் ஆகிய இருவரையும் தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.