தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை கிராமத்திற்கு நாள் தோறும் 43 என்ற எண் கொண்ட அரசு பேருந்து தினசரி ஏழு முறை சென்று வந்துள்ளது. தற்போது காலை மற்றும் மாலை ஆகிய இரு நேரங்களில் மட்டுமே அரசு பேருந்து இயக்கப்படுவதாக தெரிகிறது.
வண்ணாரப்பேட்டை, கரம்பை, சிவகாமிபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் இந்த அரசு பேருந்தில் தான் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இரு நேரங்களில் மட்டுமே அரசு பேருந்து இயக்கப்படுவதால், மாணவர்கள்உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமலும், வீடு திரும்ப முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.