தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

தஞ்சாவூர் : பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Aug 2, 2020, 3:19 PM IST

கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை !
கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை !

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தீபன்ராஜ் (40) என்பவர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். அலுவலகப்பணி நேரம் முடிந்து ஊழியர்கள் அனைவரும் நேற்று (ஆகஸ்ட் 1) வீட்டுக்குச் சென்ற நிலையில், பணியாளர் முகுந்தன் என்பவர் அலுவலகத்தை சுற்றி பார்வையிட்ட பின் மாடிக்குச் சென்று பார்த்தார்.

அப்போது, தீபன்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர். உடனடியாக அவர் அலுவலக பணியாளர்களுக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த அலுவலர்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை நகர காவல்துறையினர், அலுவலக உதவியாளர் தீபன்ராஜ் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் அலுவலக உதவியாளரின் தற்கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details