தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 22, 2019, 9:05 AM IST

ETV Bharat / state

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான நிலுவையிலுள்ள பாலியல் குற்ற வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு

தஞ்சை: தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களில் நிலுவையில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்கை விரைந்து முடிக்க குற்றத் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட காவல் அலுவலகம்

பெண்கள், குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் பழனிகுமார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நிலுவையில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் சம்பந்தமாக தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இதில், மூன்று மாவட்டத்தின் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ரவிச்சந்திரன், அன்பழகன், முருகேஷ், துணை காவல் கண்காணிப்பாளர்கள் அண்ணாதுரை, காந்த், மேலும் மூன்று மாவட்ட மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகம்

மூன்று மாவட்டங்களிலும் நிலுவையில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வண்கொடுமைகள் குறித்த வழக்குகளை ஆய்வு செய்து, விரைவாக விசாரணை முடித்து குற்றப்பத்திரிகையை 60 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய காவல் கண்காணிப்பாளர் பழனிகுமார் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் குற்ற வழக்குகளில் அறிவியல் ரீதியாக தடயங்களை சேகரித்து வழக்கு விசாரணையை மேற்கொள்வது குறித்து காவல் துறையினருக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details