பெண்கள், குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் பழனிகுமார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நிலுவையில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் சம்பந்தமாக தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில், மூன்று மாவட்டத்தின் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ரவிச்சந்திரன், அன்பழகன், முருகேஷ், துணை காவல் கண்காணிப்பாளர்கள் அண்ணாதுரை, காந்த், மேலும் மூன்று மாவட்ட மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.