தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரத்தில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை!

தஞ்சாவூர்: திருவையாறு அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் ஒன்றை மருவூர் காவல்துறையினர் மீட்டு கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By

Published : Jul 9, 2020, 1:12 AM IST

தினேஷ்
தினேஷ்

தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த மேலவட்டம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் தினேஷ்(26). திருமணமாகாத இவர் கூலி வேலை செய்துவருகிறார். இந்நிலையில் இவர் திருவையாறு அடுத்த தில்லைஸ்தானம் சுடுகாடு அருகே காவேரி ஆற்றின் வடகரையில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்த பொதுமக்கள் மருவூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அத்தகவலின் அடிப்படையில் திருவையாறு காவல்துறை டிஎஸ்பி சித்ரவேல், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், மருவூர் காவல்துறையின் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தினேஷ் உடலை கைபற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு சோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் தஞ்சையிலிருந்து தட அறிவியல் துறை உதவி இயக்குநர் ராமச்சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு தடயங்களை சேகரித்து சென்றார்.

மேலும் இது குறித்து மருவூர் காவல்துறை, தினேஷ் கொலை செய்து தொங்கவிடப்பட்டாரா அல்லது தற்கொலையா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்கபிணையில் வெளிவந்த ரவுடி வெட்டிக் கொலை - போலீசார் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details