தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த மேலவட்டம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் தினேஷ்(26). திருமணமாகாத இவர் கூலி வேலை செய்துவருகிறார். இந்நிலையில் இவர் திருவையாறு அடுத்த தில்லைஸ்தானம் சுடுகாடு அருகே காவேரி ஆற்றின் வடகரையில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்த பொதுமக்கள் மருவூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அத்தகவலின் அடிப்படையில் திருவையாறு காவல்துறை டிஎஸ்பி சித்ரவேல், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், மருவூர் காவல்துறையின் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தினேஷ் உடலை கைபற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு சோதனைக்கு அனுப்பிவைத்தனர்.