தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 11, 2020, 7:04 PM IST

ETV Bharat / state

கரோனா தொற்றிலிருந்து மீண்ட காவலர்: பூங்கொத்து கொடுத்து வரவேற்ற காவல் ஆய்வாளர்!

தஞ்சாவூர்: கரோனா தொற்றிலிருந்து மீண்டு பணிக்குத் திரும்பிய தலைமைக் காவலருக்கு, காவல் ஆய்வாளர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

கரோனா தொற்றிலிருந்து மீண்ட காவலர்: பூங்கொத்து கொடுத்து வரவேற்ற காவல் ஆய்வாளர்!
Corona affected to head constable

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இதுவரை 450க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பட்டுக்கோட்டை நகரத்தில் மட்டும் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த மன்னார்குடியைச் சேர்ந்த காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் முற்றிலும் குணமடைந்து இன்று(ஆக.11) பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் மீண்டும் பணிக்குத் திரும்பினார். அப்போது காவல் தலைமைக் காவலரை வரவேற்கும் விதமாக பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்ட காவல் துறையினர் பூங்கொத்து கொடுத்து, மலர்தூவி வரவேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details