தமிழ்நாடு

tamil nadu

கந்து வட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை

By

Published : Jul 17, 2021, 10:02 AM IST

தஞ்சாவூரில் கந்து வட்டி கொடுமையால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கந்து வட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை
கந்து வட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகேவுள்ள மதுக்கூர் ஒன்றியத்திற்குள்பட்ட பெரியகோட்டை வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணியன். இவருக்கு சுமதி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் சுப்பிரமணியன் தனது குடும்ப செலவிற்காக அதே பகுதியைச் சேர்ந்த குண்டுமணி என்கின்ற பாலசுந்தரம், மணி, வளர்மதி ஆகியோரிடம் கொஞ்சம் கொஞ்சமாக 11 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பணம் வசூலிப்பவர் பூமிநாதன் என்பவர் விவசாயி சுப்பிரமணியனிடம் பணம் வாங்கியதற்கு
கந்து வட்டி போட்டு 21 ஆயிரம் ரூபாய் என பணத்தை கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால், மனமுடைந்த சுப்ரமணியன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மதுக்கூர் காவல் துறையினர், சுப்பிரமணியனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை தீர்வல்ல

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடன் தொல்லை காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதையும் படிங்க: கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details