கும்பகோணம்:தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலத்தை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (35). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. இவர் கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்ற நிலையில், கருப்பூர் புறவழிச்சாலையில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. இதில் சம்பவ இடத்திலேயே புண்ணியமூர்த்தி உயிரிழந்தார்.