தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வருகை தந்த தமிழ்நாடு வணிகர் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தென்காசி வியாபாரிகள் சங்கத்துடன் ஆலோசனை மேற்கொண்டதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரோனா தடை உத்தரவு காரணமாக சுற்றுலா தளமான குற்றாலம் பத்து மாத காலமாக மூடப்பட்டதால், அதனை நம்பியுள்ள வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குற்றாலத்தில் குளிப்பதற்கான தடை உத்தரவை நீக்கி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கடைகள் ஏற்கெனவே அடைக்கப்பட்டுள்ளது.