தமிழ்நாடு அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதமாக மாநில உணவு பாதுகாப்பு ஆணையத்தை அமைத்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர் வாசுகி, தென்காசி மாவட்டத்திலுள்ள நியாயவிலைக் கடைகளில் நேற்று (ஜன.12) ஆய்வு நடத்தினார்.
அப்போது பொதுமக்களுக்கு வழங்கும் உணவு பொருள்கள், குடும்ப அட்டைதாரர்கள் குறைகள் குறித்தும் நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில், துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உணவு பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் வாசுகி, ”தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்குவதில் சிக்கல்கள் இருந்தது.