சிவகங்கையை அடுத்த பாசாங்கரை கிராமத்தில் ஜீவசமாதி அடையப்போவதாக இருளப்பசாமி என்பவர் ஒரு மாதத்திற்கு முன்பாகவே அறிவித்தார். அதோடு இல்லாமல் சமூக வலைதளங்களிலும் இந்தத் தகவலை அவர் வெளியிட்டார்.
இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் 13ஆம் தேதி இரவு 12 மணி முதல் காலை ஐந்து மணிவரை அவர் ஜீவசமாதி அடைவதை காண்பதற்காக காத்திருந்தனர். அதோடு மட்டுமல்லாமல் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலரும் அங்கு கூடினர்.