தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 19, 2020, 12:08 PM IST

ETV Bharat / state

சேலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திடீர் ஆய்வு!

சேலம்: நகரத்தின் முக்கியப் பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, காவல் கூடுதல் இயக்குநர் மஞ்சுநாத் ஆய்வுமேற்கொண்டார்.

சேலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திடீர் ஆய்வு!
சேலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திடீர் ஆய்வு!

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம், எடப்பாடி நகரம் முழுவதும் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பகுதிகளில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நடவடிக்கைகளைக் காவல் கூடுதல் இயக்குநர் மஞ்சுநாத், மதுவிலக்குப் பிரிவு மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ்குமார் ஆகியோர் ஆய்வுசெய்தனர்.

சேலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திடீர் ஆய்வு!

இதுவரை மேற்கொள்ளப்பட்ட, பாதுகாப்புப் பணிகள் குறித்து சுகாதாரத் துறை, காவல் துறையினரிடம் கேட்டறிந்தனர். இந்த ஆய்வின்போது, எடப்பாடி கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், நகராட்சி ஆணையர், நிர்வாக மண்டல இயக்குநர் உள்பட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ஆறுகளில் மாசு குறைந்தது

ABOUT THE AUTHOR

...view details