சேலம் மாவட்டத்தில் உள்ள அரசினர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் முதல் முறையாக பிரிட்ஜ், ஏர் கண்டிஷனர் ஆகியவற்றை பராமரிப்பது மற்றும் பழுது பார்க்கும் வகையில் இரண்டு வருட இலவச தொழிற்பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்ற அனைத்து மாணவிகளும், மாதம் 500 ரூபாய் உதவித் தொகையுடன் இப்பயிற்சியைப் பெறலாம். மேலும் பயிற்சியை முடிக்கும் அனைவருக்கும் கேம்பஸ் நேர்முகத்தேர்வு மூலம் வேலையும், தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் சுய தொழில் வாய்ப்புகளும் உருவாக்கித் தரப்படும்.