தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவர் வீட்டில் 20 பவுன் தங்க நகை கொள்ளை; மர்ம நபர் அட்டூழியம்

சேலம்: அஸ்தம்பட்டி பகுதியில் அரசு மருத்துவர் வீட்டில் 20 பவுன் தங்க நகை மர்ம நபரால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Jul 9, 2019, 9:57 AM IST

அரசு மருத்துவர் வீட்டில் 20 பவுன் தங்க நகை கொள்ளை; மர்ம நபர் அட்டூழியம்

சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டி அருகே உள்ள ஜான்சன்பேட்டை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் அருணா, அவரது கணவர் இளங்கோ வசித்துவருகின்றனர்.

இவர்கள் இருவரும் நேற்று மருத்துவமனை பணிக்குச் சென்றுவிட்டனர். பின்னர் மாலை 4 மணி அளவில் மருத்துவர் இளங்கோ வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் மூலம் தடையங்களைச் சேகரித்தனர்.

அரசு மருத்துவர் வீட்டில் 20 பவுன் தங்க நகை கொள்ளை

இந்நிலையில், அடுக்குமாடியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது, 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் வந்துவிட்டு வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர், அந்த மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details