தமிழ்நாடு

tamil nadu

ஏற்காடு மலைப்பாதையில் உருண்டுவிழுந்த ராட்சதப் பாறை அகற்றம்

By

Published : Nov 13, 2021, 7:31 PM IST

சேலம் அருகே ஏற்காடு மலைப் பாதையில் உருண்டுவிழுந்த ராட்சதப் பாறை, வெடிவைத்து அகற்றப்பட்டது.

ராட்சதப் பாறை அகற்றம்
ராட்சதப் பாறை அகற்றம்

சேலம்:உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுவருகிறது.

சேலத்திலிருந்து கொண்டப்பநாயக்கன்பட்டி வழியாக ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் கடந்த ஒரு மாதத்தில் இரண்டுமுறை மண்சரிவு ஏற்பட்டது.

ராட்சதப் பாறை அகற்றம்

நேற்றிரவு (நவம்பர் 12) சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் 40 அடி பாலம் அருகே சுமார் 200 டன் எடை கொண்ட ராட்சத பாறை ஒன்று சரிந்து விழுந்தது. சரிந்து விழுந்த பாறையை அகற்றும் பணியில் அதிகாலை முதல் நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.

பெரிய அளவிலான பாறை என்பதால் உடைத்து அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டதால் பாறையில் வெடிவைத்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் 30 இடங்களில் அந்தப் பாறையில் துளையிடப்பட்டு வெடிமருந்து நிரப்பப்பட்டது. தொடர்ந்து வெடிக்கச் செய்ததில் பாறை வெடித்துச் சிதறியது.

வெடித்துச் சிதறிய பாறை கற்களைப் பொக்லைன் கொண்டு அகற்றப்பட்டது.

இதையும் படிங்க:உழவருக்கு உடனடி நிவாரணம் - ஸ்டாலின் உறுதி

ABOUT THE AUTHOR

...view details