தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 16, 2019, 11:49 PM IST

ETV Bharat / state

சமூக ஆர்வலர் என்ற பெயரில் விவசாய நிலம் அபகரிப்பு - விவசாயி கண்ணீர் மல்க புகார்!

சேலம்: சமூக ஆர்வலர் என்ற பெயரில் விவசாய நிலத்தை அபகரித்துக் கொண்டதாக பாதிக்கப்பட்ட விவசாயி, தனது குடும்பத்துடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

salem

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த சாந்தாபாளையம் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரின் சகோதரர் யுவராஜா. இருவரும் குடும்பத்துடன் அதேபகுதியில் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வருகின்றனர்.

இவர்களுக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் செல்வம், கந்தசாமி, ராஜா, விவேக் ஆகியோர் அபகரித்துக் கொண்டு அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து யுவராஜா, முருகேசன் இருவரும் காவல்துறையில் புகார் அளித்தும், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் இயங்கும் நில அபகரிப்பு கும்பலுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.

விவசாயி யுவராஜா

இந்நிலையில் இன்று, இருவரும் அபகரிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக் கோரியும், உயிருக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரியும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். மேலும், நில அபகரிப்பில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்களில் காந்தியவாதி சசிபெருமாள் உறவினர்களும் இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: பஞ்சமி நிலம் விவகாரம்: உதயநிதி ஸ்டாலினிக்கு அழைப்பாணை!

ABOUT THE AUTHOR

...view details