சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அருள் செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியதாவது, "பாமக இட ஒதுக்கீடு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியுள்ள திமுக மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறனை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் மன்னிப்பு கேட்கும் வரை தமிழ்நாடு முழுவதும் எங்கு சென்றாலும் அவருக்கு எதிராக பாமக சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும்.
ஊழலில் திளைத்த திமுக எம்பி தயாநிதி மாறன், ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸையும் பேச எந்த தகுதியும் இல்லை. முறைகேடாக தனியார் தொலைக்காட்சிக்கு தொலைத்தொடர்பு அலைக்கற்றை வழங்கி 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தவர் தயாநிதிமாறன். அவர் பாமக இட ஒதுக்கீடு விவகாரத்தை பற்றி பேச எந்த ஒரு தகுதியும் இல்லை.