தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 7, 2020, 12:21 AM IST

ETV Bharat / state

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் மூதாட்டி பலி!

சேலம்: பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக வந்த கார் மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

accident
accident

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள துடுப்பதியைச் சேர்ந்தவர் சம்பத் ராஜா இவரது மனைவி ரூபி எலிசபெத், இருவரும் பணியிலிருந்து ஓய்வுப் பெற்று வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் துடுப்பதியிலிருந்து பெருந்துறை செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் பெருந்துறையை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பெத்தாம்பாளையம் பிரிவு பகுதியில் வலது புறமாக வாகனத்தைத் திருப்பும்போது பெருந்துறையிலிருந்து வேகமாக வந்த கார் ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் வாகனத்தின் பின்புறமாக அமர்ந்திருந்த ரூபி எலிசபெத் தூக்கி வீசியெறியப்பட்டதில் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டிக் கொண்டு வந்த சம்பத்ராஜாவுக்கும் கால், கை உள்பட உடலில் பல்வேறு பகுதிகளிலும் காயம் ஏற்பட்டது.

விபத்து குறித்து தகவலறிந்த பெருந்துறை காவல்துறையினர் உடனடியாக சம்பத்ராஜாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த ரூபி எலிசபெத் சடலத்தை உடற்கூற் ஆய்விற்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்தனர்.

பெருந்துறை அரசு மருத்துவமனையில் முதலுதவி வழங்கப்பட்ட சம்பத்ராஜா உடனடியாக ஈரோடு கொண்டு செல்லப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சாலை விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்துக்கு காரணமான கார் ஓட்டுநரைக் கைது செய்ததுடன் காரையும் பறிமுதல் செய்துள்ளனர். கணவர் கண் முன்னாலே மனைவி உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details