தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் (80). இவர் சங்ககிரிக்கு அருகில் உள்ள தேவூர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர்.
வயது முதிர்வு காரணமாக சில நாள்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், காளியண்ணனுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.