நாடு முழுவதும் கேவிட்-19 கரோனோ வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில் மருத்துவமனைகள் முழுமையான கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்நிலையில் சேலத்தில் தமிழ்நாடு கண் மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மருத்துவர் செல்வரங்கம் கூறுகையில், "அண்மையில் சேலம் மண் கண் மருத்துவர்கள் சங்க உறுப்பினர்கள் இணையவழி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஊடகங்கள் வாயிலாகத் தெரிவிக்க விரும்புகிறோம். இன்றுமுதல் தனியார் கிளினிக், மருத்துவமனைகளில் அவசர கண் நோய்களுக்கு மட்டுமே உடனடியாகச் சிகிச்சை அளிக்க இயலும்.
காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணிவரையும் தனியார் மருத்துவமனைகளில் கண் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். பிற நேரங்களில் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.