சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த கோனேரிவளவு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகள் அனுஸ்ரீ (7) கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த அனுஸ்ரீ பரிசோதனையில் டெங்குப் பாதிப்புக்கு ஆளாகி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து சிறுமியை மேல் சிகிச்சைக்காகச் சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அனுஸ்ரீ சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.