சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பொன்னுசாமி தனது நிலத்தின் ஒரு பகுதியை கால்நடை மருத்துவமனைக்கு பாதை அமைக்க எழுதிக் கொடுத்துள்ளார்.
ஆனால் அந்த நிலத்தை ஆத்தூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சின்னதம்பி வீட்டுமனை அமைத்து நிலத்தை விற்பனை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த விவசாயி நிலத்தை வழங்க மறுத்து நிலத்திற்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.