சேலம்:ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை விமானம் மூலம் சேலத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து சேலம் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது, சென்னை செல்வதற்காக சேலம் விமான நிலையம் வரவிருந்த முதலமைச்சரிடம் புகார் மனு அளிப்பதற்காக, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக பிரமுகர் லட்சுமி என்பவர் விமான நிலையம் அருகே காத்திருந்தார்.
இதனை அறிந்த காவல் துறையினர் லட்சுமிக்கு அனுமதி மறுத்து அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அதிமுக தலைமை அலுவலகத்தில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தினர். இதனால் அதிருப்தி அடைந்த லட்சுமி, "அமைச்சர் பெஞ்சமின் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். கட்சியில் தொடர்ந்து செயல்பட முடியாத வகையில் நெருக்கடிகளைக் கொடுக்கிறார்.