ராமநாதபுரம்: தொருவளூர் சிறுவயல் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (22). இவரது தூரத்து உறவினர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌமியா(24). இவர், கடந்த சில மாதங்களாக ராமநாதபுரம் கே.கே. நகரில் வசித்து வந்தார். இந்நிலையில், விஜய்யிடம் குடும்ப தேவைக்காக சௌமியா 13.5 சவரன் தங்க நகைகளை வாங்கியுள்ளார்.
இந்த நகைகளை விஜய் திருப்பி கேட்டபோது, “எனக்குப் போக்குவரத்துத் துறை அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்களை நன்கு தெரியும். உனது தம்பிகளுக்கு அரசு வேலை வாங்கித் தருகிறேன்” எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய விஜய், தனது தம்பி தனுஷ் என்பவருக்கு வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.
வேலை வாங்கித் தருவதாக மோசடி
இதற்காக சௌமியா விஜய்யிடம் 75 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார். மேலும், விஜய்யின் உறவுக்கார தம்பிகளான விஸ்வா, பாலமுருகன் ஆகியோருக்கும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி தலா 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை வாங்கியுள்ளார்.
பணம் வாங்கி பல நாள்கள் ஆன நிலையில், சௌமியாவை சந்தித்த விஜய் விரைவில் வேலை வாங்கித் தரும்படியும் இல்லையெனில் பணம், நகைகளைத் திருப்பித் தரும்படியும் கேட்டுள்ளார். இதற்கு சௌமியா, பணத்தினை அமைச்சர்களிடம் கொடுத்துவிட்டதாகவும், வேலை கட்டாயம் வாங்கி தந்துவிடுவார்கள் என்றும் கூறி காலம் கடத்தி வந்துள்ளார்.
காவல் துறை விசாரணை