தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 9, 2020, 9:48 PM IST

ETV Bharat / state

உத்தரகோசமங்கையில் விஐபிக்களுக்கு முன்னுரிமை - 4 மணி நேரம் காத்திருந்த மக்கள் வேதனை

ராமநாதபுரம்: விஐபிகளுக்கு முன்னுரிமை கொடுத்து சாதாரண பக்தர்களை நான்கு மணி நேரத்திற்கும் மேல் காக்க வைத்த அறநிலையத்துறை இணை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அர்ச்சகர்கள் குற்றம்சாட்டினர்.

ramanadhapuram temple
ramanadhapuram temple

இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள மரகத நடராஜரின் ஆருத்ரா தரிசனம் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. வழக்கம்போல் அனைத்து அர்ச்சகர்களும் இன்று சந்தனக்காப்பைக் கலைத்து 33 வகையான அபிஷேகங்களை செய்வது வழக்கம். ஆனால், இன்று அறநிலையத்துறையின் இணை ஆணையர் தனபாலன் பாரம்பரிய குழுக்கள் அனைவரையும் வெளியேறும்படி உத்தரவிட்டார்.

வழக்கமாக அவர்கள் இப்படித்தான் பூஜை செய்வோம் என்று கூறிய நிலையிலும் காவல் துறையினரை வைத்து அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிகழ்வு அவமானகரமானதாக இருந்ததாகக் கூறிய அர்ச்சகர்கள், அனைவரும் கோயிலை விட்டு வெளிநடப்பு செய்தனர். மேலும், விஐபிக்களை கோயிலின் கருவறைக்கு முன்பாக அமர வைத்து நான்கு மணி நேரம் பூஜையும் நடைபெற்றது.

ஏழைப் பக்தர்கள் இலவச தரிசனம் செய்ய இயலாமல், சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. அதுமட்டுமின்று செய்தியாளர்கள் ஆண்டாண்டு காலமாக புகைப்படம் எடுத்து வந்த மரகத நடராஜரை புகைப்படம் எடுக்கக்கூடாது என்று கூறி அனைத்து செய்தியாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மரகத நடராஜர் கோயில்

தமிழ்நாடு அரசுக்கு விருது மழை! - முதலமைச்சர் பெருமிதம்!

இதனால் செய்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்து வெளியில் வந்த அறநிலையத்துறை இணை ஆணையர் தனபாலை முற்றுகையிட்டனர். ஆனால் இதற்கு எந்த முறையான பதிலையும் அவர் அளிக்கவில்லை.

ABOUT THE AUTHOR

...view details