ராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்துவது சட்டவிரோதமாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. நேற்று (ஜன. 8) தனுஷ்கோடி பகுதியிலிருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்த இருப்பதாக இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து தனுஷ்கோடி, அதனைச் சுற்றி உள்ள தீவுப் பகுதிகளில் ஹோவர்கிராப்ட் படகு மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டனர்.