ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புகையில்லா போகிப் பண்டிகையைக் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு முகாம் பேரணி நடைபெற்றது.
பள்ளியில் செயல்பட்டுவரும் தேசியப் பசுமைப் படை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் சர் ஐசக் நியூட்டன் அறிவியல் மன்றம் இணைந்து புகையில்லா போகிப் பண்டிகையைக் கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு முகாமிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமை வகித்தார். சர் ஐசக் நியூட்டன் அறிவியல் மன்ற ஆசிரியர் செந்தில் வடிவேலன் வரவேற்புரையாற்றியானர்.