ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதற்கு முன்பிருந்தே சாலைகள் சேதமடைந்த நிலையில், தற்போது பெய்த கனமழையின் காரணமாக மேலும் சேதமடைந்து பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தங்கச்சிமடம் வலசை தெரு அருகில் மழை நீர் தேங்கி இருந்த சாலையில் வாழைமர கன்று, பூ, செடி உள்ளிட்டவற்றை நாற்று நடுவது போல நாற்று நடும் நூதன போராட்டத்தை நடத்தினர்.