ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து சிப்பியான், ஆரோக்கியம், சூசை, டேவிட் ஆகிய நான்கு மீனவர்கள் நேற்று (அக்டோபர் 28) படகில் கடலுக்குச் சென்றனர்.
இன்று (அக்டோபர் 29) மாலை வரையிலும் 4 மீனவர்களும் கரை திரும்பாததால், ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் நான்கு மீனவர்களை மீட்க வலியுறுத்தி மாயமான மீனவர்களின் உறவினர்கள் மனு அளித்தனர்.
அதன்பிறகு மாயமான மீனவர்களை விசைப் படகில் 4 பேர் கொண்ட குழுவினர் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.