தமிழ்நாடு

tamil nadu

நடுக்கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணி தீவிரம்

By

Published : Oct 29, 2020, 8:11 PM IST

ராமேஸ்வரம்: நடுக்கடலில் மாயமான மண்டபம் மீனவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்கள்
மீனவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து சிப்பியான், ஆரோக்கியம், சூசை, டேவிட் ஆகிய நான்கு மீனவர்கள் நேற்று (அக்டோபர் 28) படகில் கடலுக்குச் சென்றனர்.

இன்று (அக்டோபர் 29) மாலை வரையிலும் 4 மீனவர்களும் கரை திரும்பாததால், ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் நான்கு மீனவர்களை மீட்க வலியுறுத்தி மாயமான மீனவர்களின் உறவினர்கள் மனு அளித்தனர்.

அதன்பிறகு மாயமான மீனவர்களை விசைப் படகில் 4 பேர் கொண்ட குழுவினர் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details