எதிர் வரும் தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 விழுக்காடு வாக்குப்பதிவினை வலியுறுத்தும்விதமாக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் தனிச் சிறப்புகளில் ஒன்றான பாம்பன்
பாலத்தில், மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாம்பன் பகுதியைச் சார்ந்த மீனவர்கள் தங்களது மீன்பிடிப் படகுகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர். அப்போது அவர்கள் ‘100 சதவிகிதம் வாக்களிப்போம்’ என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர். தொடர்ந்து, பாம்பன் பாலத்தின் வடகடல் பகுதியிலிருந்து தென்கடல் பகுதிக்கு சுமார் 500 மீ. தூரத்திற்கு பயணம் செய்தனர்.