தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர் பிரச்சனை பற்றி பேச திமுகவிற்க்கு அருகதை இல்லை

ராமநாதபுரம்: தண்ணீர் குறைபாடு பற்றி பேச திமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை என அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.

By

Published : Jun 23, 2019, 4:05 PM IST

தண்ணீர் பிரச்சனை பற்றி பேச திமுகவிற்க்கு அறுகதை இல்லை

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு குடிநீர் வாரியம் சார்பாக வறட்சி நிவாரண பணிக்காக 60 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வழங்கும் தொடக்க விழா இன்று திருப்புல்லாணி, பள்ளமோர்குளம் என்ற கிராமத்தில் மக்களுக்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பொது மக்களுக்கு தண்ணீர் வழங்கினர்.

தண்ணீர் பிரச்சனை பற்றி பேச திமுகவிற்க்கு அறுகதை இல்லை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணிகண்டன், "ராமநாதபுரத்தில் 98 விழுக்காடு தண்ணீர் தட்டுப்பாடு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் தேவைப்படும் கிராமங்களுக்கு லாரி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தண்ணீர் குறைபாடு பற்றி பேச திமுகவிற்கு அருகதை இல்லை, ஒரு மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை இருக்கும்போது அருகில் தண்ணீர் உள்ள மாவட்டத்தில் இருந்து தண்ணீர் கொடுப்பதுதான் முறை இதில் அரசியல் செய்யக்கூடாது என்றும் இப்படி எதிர்ப்பவர்களுக்கு காவிரி பிரச்னை பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details