ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்த கன்னிராஜபுரம் அருகே உள்ள வள்ளுவாடியைச் சேர்ந்த ஆசிரியர் பாலமுருகன் என்பவருக்கும், பூர்ணலிங்க ஈஸ்வரி என்பவருக்கும் இன்று (அக். 30) திருமணம் நடைபெற்றது.
இத்திருமணத்திற்கு புதுவிதமாக பேனர் அடிக்க நினைத்த ஆசிரியர் பாலமுருகனின் நண்பர்கள் தற்போது மனிதக் குலத்தை அச்சுறுத்திவரும் கரோனா பெருந்தொற்றைக் கலாய்த்து பேனர் அடித்துள்ளனர்.
அதில், வள்ளுவாடியில் பரபரப்பு ஆசிரியருக்கு தொற்று உறுதி எனவும், தொற்றானவர் பாலமுருகன் என மணமகன் பெயரையும் தொற்றிக் கொண்டவர் என மணமகள் பூர்ணலிங்க ஈஸ்வரி எனவும் தொற்று உறுதியான நாள் என திருமணம் நடைபெறும் தேதியையும், பரவிய இடம் என திருமணம் நடைபெற்ற இடத்தையும் குறிப்பிட்டு உள்ளனர்.