சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்துள்ள கல்யாணத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் கமுதி அடுத்துள்ள கீழகாக்காகுளம் கிராமத்தில் தனது நண்பர்களுடன் கடலை தோட்டத்தில் விவசாய வேலை செய்துவந்துள்ளார்.
அப்போது, தோட்டத்திலிருந்த வறண்ட கிணற்றில் தடுமாறி விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த ரவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறிது நேரம் கழித்து இவரது நண்பர்கள், உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்க்கும்போது ரவி கிணற்றில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.